Friday 8 February 2013

விவேகனந்தர் இல்லம் உருவான கதை

ஐஸ் ஹவுஸ்,கேசில் கெர்னன்,மரைன் மேன்ஷன் என்று அழைக்கப்படும் விவேகனந்தர் இல்லம் தென்னிந்திய ராமகிருஷ்ண இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.1897 ஆம் ஆண்டில் ஒன்பது நாட்கள் தன் அனல் பறக்கும் சொற்பொழிவுகளின் மூலம் இந்தியாவின் விழிப்புணர்வை எழச்செய்த சுவாமி விவேகனந்தர் தங்கிய இடம் என்ற பெருமை பெற்றது விவேகனந்தர் இல்லம்.மேலும்,இந்த இல்லம் தென்னிந்தியாவில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை அமைந்த இடம் என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

விவேகனந்தர் இல்லத்தில்தான் சுவாமிஜியின் புகழ்பெற்ற சகோதர சீடர் சுவாமி ராமகிருஷ்னானந்தர்  ஸ்ரீராமகிருஷ்ண  மடத்தில் தற்போது நடைபெற்றுவரும் பல்வேறு நற்பணிகளுக்கு வித்திட்டார்.ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாறு விவேகானந்தர் இல்லத்துடன் ஆழமாக பின்னி பிணைக்கப்பட்டுள்ள ஒரு வரலாறு ஆகும்.இந்த இல்லத்தில் 1999 முதல் சுவாமி விவேகனந்தர் மற்றும்  இந்திய  கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நிரந்தர கண்காட்சியை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண  நடத்தி  வருகிறது.

விவேகனந்தர் இல்லத்தின்  வரலாறு 60 நிகழ்வுக் குறிப்புகளின் மூலம் இந்த வலைப்பூவில் சொல்லப்போகிறேன்.ஒரு தொடர் வரலாறாக ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தின் வரலாற்றை வழங்குவதுடன்,பல்வேறு காலகட்டங்களில் இங்கு
வாழ்ந்த மற்றும் புரிந்த புகழ்பெற்ற சான்றோர்களையும் இந்த வலைப்பூ தொகுப்பு குறித்துக் காட்டுகிறது.

No comments:

Post a Comment