அந்த ரிஷிகளைப்பற்றியும் அவர்களின் மகிமையைப்பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அந்த ஒளித்திரள் ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்த தெய்வீகக் குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளில் ஒருவரிடம் வந்து தன மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு, வீணையை மிஞ்சும் அமுதக் குரலால் அந்த ரிஷியிடம், " நான் போகிறேன்". நீ என்னுடன் வரவேண்டும்" என்று கூறியது. அவரது கருணைமயமான கண்கள் இதயப்பூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அப்போது ரிஷியின் உடல் மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒலியுறுப்
பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரனைக் (சுவாமி விவேகானந்தர்) கண்டதும், அவனே அந்த ரிஷி என்பதை அறிந்துகொண்டேன்...